அமெரிக்க அரசாங்க முடக்கம்: 15 நிமிடங்களில் தீர்வுகாணமுடியும் - அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியினர் மனதுவைத்தால், அரசாங்கப் பகுதி முடக்கத்திற்குப் 15 நிமிடங்களில் தீர்வுகாணலாம் என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியினர் மனதுவைத்தால், அரசாங்கப் பகுதி முடக்கத்திற்குப் 15 நிமிடங்களில் தீர்வுகாணலாம் என்று கூறியிருக்கிறார்.
மெக்ஸிகோவுடனான எல்லைச் சுவர் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தற்காத்து வெளியிட்ட தொடர் Twitter பதிவுகளில் அதிபர் அவ்வாறு குறிப்பிட்டார்.
எல்லைச் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கவேண்டும் என்ற திரு. டிரம்ப்பின் கோரிக்கையை ஜனநாயகக் கட்சி நிராகரித்ததால், அமெரிக்க அரசாங்கம் கடந்த 22 நாட்களாகப் பகுதி முடக்கத்தைச் சந்தித்துள்ளது.
அது அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆக நீண்ட அரசாங்க முடக்கம்.