அமெரிக்கா, குடியேறிகளின் முகாமோ அகதிகளுக்கான தங்குமிடமோ அல்ல: அதிபர் டிரம்ப்
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளின் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து வல்லந்தமாகப் பிரிக்கப்படுவதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளின் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து வல்லந்தமாகப் பிரிக்கப்படுவதன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
எல்லைப் பகுதிகள் வழியாக இடம்பெறும் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் ஜனநாயகக் கட்சியினர் தடைசெய்வதால்தான் அந்த நெருக்கடி உருவானதாக அவர் குறைகூறினார்.
அமெரிக்கா குடியேறிகளின் முகாமோ, அகதிகளுக்கான தங்குமிடமோ அல்ல என்றார் திரு. டிரம்ப்.
அமெரிக்க அதிபரின் சர்ச்சைக்குரிய குடிநுழைவுக் கொள்கையால், கடந்த 6 வாரங்களில் சுமார் 2,000 பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டுள்ளனர்.