அமெரிக்க தற்காப்பு விரிவாக்கம்: அதிபர் டிரம்ப் ஒப்புதல்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான தற்காப்பு அணுகுமுறைகளை மேம்படுத்த பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான தற்காப்பு அணுகுமுறைகளை மேம்படுத்த பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
John S McCain தேசிய தற்காப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ், அதிபர் டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு 716 பில்லியன் டாலர் தொகையை அளித்தார்.
நவீன வரலாற்றில், இராணுவம் மற்றும் போர்க்காலத் திறன்களின் பேரில் செய்யப்படும் மிக முக்கியமான முதலீடு அது என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் தமது வளர்ச்சிக்கு மிகப் பெரிய மிரட்டலாகக் கருதி வருவதை, அதிபர் டிரம்பின் அந்தச் செயல் புலப்படுத்துகிறது.
மேலும், அந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்கா, வட கொரியா சார்ந்த அணுவாயுத மிரட்டலையும் முறியடிக்க முற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு, தென் கொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை 22 ஆயிரத்திற்கும் குறைவாகக் குறைக்க முடியாது.
தற்போது, அங்கு 28ஆயிரம் அமெரிக்க இராணுவத் துருப்புகள் பணிகப்பட்டுள்ளன.