உலக ஆமைகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
உலகெங்குமிருக்கும் விலங்குத் தோட்டங்களில் அதற்கான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பெருவில் உள்ள விலங்குத் தோட்டத்தின் காப்பாளர்கள் ஆமைகள் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தனர். அதன் பலனாக இன்று அந்த விலங்குத் தோட்டத்தின் ஆமைகளுக்குப் பரிசாக மலர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
40 வகை ஆமைகளுக்கு உறைவிடமாகத் திகழ்கிறது பெரு விலங்குத் தோட்டம்.
அருகி வரும் மஞ்சள்-கால் ஆமைகள், Galapagos தீவைச் சேர்ந்த 150 ஆண்டுப் பழமையான 'Sanson' ஆமைகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.