Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவிய இரட்டைத் தாதியர்

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரு மாது இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுக்கவிருந்தார்.

வாசிப்புநேரம் -

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரு மாது இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுக்கவிருந்தார்.

அது ஒன்றும் புதிதில்லை. ஆனால் அந்த இரட்டையரை வரவேற்கக் காத்திருந்த இரு தாதியரில்தான் வித்தியாசம். தொரி ஹாவர்ட், தாரா டிரிங்கட் எனும் அந்தத் தாதியரும் இரட்டையரே.

CNN நிறுவனம் அந்தத் தகவலைத் தெரிவித்தது.

பிரசவ தினத்தன்று ரெபெக்கா எனும் அந்தப் பெண்ணும் அவரின் கணவர் பிரெனன் வில்லியம்ஸும் பதற்றத்துடன் இருந்தனர்.

ஆனால், பிரசவ அறையில் பணிபுரியும் தாதியர் இரட்டையர் என்று தெரிந்ததும் நிம்மதி பிறந்தது இருவருக்கும்.

3 நிமிட இடைவெளியில் எடிசன், எமா வில்லியம்ஸ் எனும் இரண்டு மகள்களைப் பெற்றெடுத்தார் ரெபெக்கா.

குழந்தைகள் இருவரும் பெரியவர்களானதும் இரட்டைத் தாதியரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் பெற்றோர்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்