லண்டனுக்கும் பரவிவிட்டதா மஞ்சள் அங்கி இயக்கம் ?
லண்டனில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே கைகலப்பு நேர்ந்துள்ளது.
லண்டனில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே கைகலப்பு நேர்ந்துள்ளது.
மோதல் அதிகரித்த நிலையில், காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வல்லந்தமாகப் பிரித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர், மஞ்சள் அங்கிகளில் வந்திருந்தனர்.
பிரான்ஸின் மஞ்சள் அங்கி இயக்கத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டதை அது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.
வலசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவேண்டும் என்று குரல்கொடுத்தனர்.
இடசாரியினர் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொதுத் தேர்தல் நடத்தவும் கோரிக்கை விடுத்தனர்.
இருதரப்பினருமே, பிரான்ஸின் மஞ்சள் அங்கி இயக்கத்துக்கும் தங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறினர்.
ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில், பிரிட்டன் நாடாளுமன்றம் வாக்களிக்க 3 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.