பெரும்பாலான பதின்ம வயதினருக்கு COVID-19 தடுப்பூசி போடவேண்டாம்: பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு
பெரும்பாலான பதின்ம வயதினருக்கு COVID-19 தடுப்பூசி போடவேண்டாம்: பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு
பிரிட்டிஷ் அரசாங்கம், பெரும்பாலான பிள்ளைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் COVID-19 தடுப்பூசி போடவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறது.
இப்போது கிடைக்கும் தடுப்புமருந்துகள் குறித்து, அதிகத் தகவல்கள் கிடைக்கும்வரை காத்திருக்கப் போவதாக, பிரிட்டன் குறிப்பிட்டது.
கடுமையான நரம்புக் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, கற்றல் குறைபாடு-ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மட்டும் Pfizer-BioNTech தடுப்புமருந்துக்குத் தகுதி பெறுவதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.
நிபுணர் ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி போடவேண்டாம் என்னும் முடிவு எடுக்கப்பட்டது.
அந்தப் பிரிவினர், மிக லேசான பாதிப்புக்கே ஆளாவதாகக் குழு குறிப்பிட்டது.