ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நதியைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நதியைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நதியைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த நதி ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய தண்ணீர் விநியோக முறையின் உயிர்நாடியாகத் திகழ்கிறது.
Murray-Darling நதி சரிவரப் பராமரிக்கப்படாததால் ஆறு மாதங்களில் மில்லியன் கணக்கான மீன்கள் மாண்டன. அந்த நதி பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது.
அது சில மாநிலங்களைக் கடந்து செல்கிறது.
குறைந்த நீரோட்டம், குறைவான உயிர்வாயு ஆகியவை மீன்கள் மாண்டதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நச்சுப் பாசிகளும் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.