Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 91,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

அமெரிக்காவில் ஒரே நாளில் 91,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 91,295 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 90,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாாளம் காணப்படுவது இதுவே முதல்முறை.

Johns Hopkins பல்கலைக்கழகம் அந்தத் தகவலை வெளியிட்டது.

இம்மாதப் பிற்பாதியிலிருந்து அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில், நோய்த்தொற்றுக்கு ஆளானோர் அதிகமுள்ள நாடு அமெரிக்கா.

அங்கு கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 9 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சுமார் 228,000 பேர் மாண்டனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்