பைடனின் பதவியேற்பில் வன்முறை நடக்கலாம் - அதிகாரிகள் எச்சரிக்கை
அமெரிக்காவின் புதிய அதிபராகத் திரு. ஜோ பைடன் பதவியேற்கும் சடங்கை முன்னிட்டு, ஆயுதம் ஏந்திய வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடக்கலாம் என மத்திய புலனாய்வுப் பிரிவு முன்னுரைத்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராகத் திரு. ஜோ பைடன் பதவியேற்கும் சடங்கை முன்னிட்டு, ஆயுதம் ஏந்திய வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடக்கலாம் என மத்திய புலனாய்வுப் பிரிவு முன்னுரைத்துள்ளது.
பதவியேற்புச் சடங்கு வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தற்போதைய அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மேலும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மிரட்டல் விடுத்திருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பை வலுப்படுத்த சுமார் 15,000 பாதுகாப்புப் படையினரைப் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.