Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 4,500 பேர் மரணம்

 COVID-19: அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 4,500 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
COVID-19: அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 4,500 பேர் மரணம்

(படம்: AFP/Angela Weiss)

அமெரிக்காவில் ஒரே நாளில், கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அங்கு முதன்முறையாக 24 மணிநேரத்தில் 4,500 பேர் மாண்டதாக Johns Hopkins பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

அண்மை நிலவரப்படி, அமெரிக்காவில் 235,000 பேர் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அங்குக் கிருமிப்பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.

உலக அளவில் அமெரிக்காவில்தான் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவரை 22.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 2 மில்லியன் பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்