டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பிற்கு முன்னர் பேச்சுவார்த்தை
அமெரிக்காவும் வடகொரியாவும் அடுத்த வாரம் பேச்சுகளைத் தொடரவுள்ளன.
அமெரிக்காவும் வடகொரியாவும் அடுத்த வாரம் பேச்சுகளைத் தொடரவுள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் வியட்நாமில் இம்மாத இறுதியில் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பை நடத்தவிருக்கின்றனர்.
அதற்கான ஆயத்தங்கள் குறித்து அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. வட கொரியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் பேகன் (Stephen Biegun) அதனைத் தெரிவித்தார்.
வியட்நாமின் ஹனோய் நகரத்தில் இம்மாதம் 27, 28-ம் தேதிகளில் உச்சநிலைச் சந்திப்பு இடம்பெறும்.