அமெரிக்கா, ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றத்தில் மீண்டும் சேரத் திட்டம்
அமெரிக்கா, ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றத்தில் மீண்டும் சேரத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றத்தில் மீண்டும் சேரத் திட்டமிட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) நிர்வாகத்தின்கீழ், இஸ்ரேல் தொடர்பான சர்ச்சையால், மூவாண்டுக்கு முன்னர் மன்றத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.
இப்போது மன்றத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், மீண்டும் அதில் சேர அமெரிக்கா முனைகிறது.
மனித உரிமை மன்றத்துக்கான புதிய உறுப்பினர்களை, ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபை இன்று தெரிவுசெய்கிறது.
உறுப்பு நாடுகளின் மூவாண்டுத் தவணைக் காலம் வரும் ஜனவரி மாதம் தொடங்கும்.