Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் சூதாட்டக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் கொலை

அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநில சூதாட்டக் கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநில சூதாட்டக் கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

மூன்றாவது நபர் கடுமையாகக் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

Green Bayஇல் உள்ள சூதாட்டக்கூடத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சூதாட்டக் கூடத்துடன் இணைந்த, மாநாட்டு நிலையத்திலும் ஹோட்டலிலும் வேட்டுச் சத்தம் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிக்காரர், கோபமடைந்து, குறிப்பிட்ட ஒருவரைக் குறிவைத்துச் சுட்டதாக உள்ளூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால் அந்த நபர் அப்போது சூதாட்டக் கூடத்தில் இல்லை என்று கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்