ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா செல்லும் அகதிகளுக்கான அனைத்து விமானச் சேவைகளும் மேலும் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா செல்லும் அகதிகளுக்கான அனைத்து விமானச் சேவைகளும் மேலும் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்
ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் அமெரிக்கா மேலும் ஒரு வாரத்திற்கு நிறுத்தியுள்ளது.
ஆகாயப்படைத் தளங்கள் சிலவற்றில் தட்டம்மை பரவுவதால், விமானப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் அதற்கான கோரிக்கையை முன்வைத்ததாகத் தற்காப்பு அமைச்சு உறுதிசெய்தது.
தட்டம்மையால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்ட பிறகு, அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து விமானப் பயணங்களை நிறுத்தினர்.
3 தளங்களில் ஐவர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களை வெளியேற்றும் ஒப்பந்தத்தின்கீழ், ஆப்கான் அகதிகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.