Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: மில்லியன் கணக்கான COVID-19 தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் அரசாங்கம்

அமெரிக்கா: மில்லியன் கணக்கான COVID-19 தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் அரசாங்கம் 

வாசிப்புநேரம் -

அமெரிக்கா, தன் வசமுள்ள மில்லியன் கணக்கான COVID-19 தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் அனைவருக்கும் அல்லது நாள்பட்ட நோயால் அவதிப்படுவோருக்குத் தடுப்பூசி போடுமாறு மாநில அரசாங்கங்களிடம் டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நாள்தோறும் 700,000 பேருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. அடுத்த பத்து நாள்களில் நாள்தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.

அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி மெதுவாகவே நடந்து வருகிறது.

மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதில் நீடிக்கும் சிக்கல், முறையாகத் திட்டமிடப்படாத மத்திய அரசாங்கத்தின் செயல்முறை ஆகியன அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்