சித்திரங்களுக்குள் பார்வையாளர்களைக் கொண்டு செல்லும் கண்காட்சி
கலைக்கூடங்களுக்குச் சென்றால் அங்குள்ள அழகிய சித்திரங்களையும் சிலைகளையும் தூரத்திலிருந்து பார்த்து ரசிப்போம்.
கலைக்கூடங்களுக்குச் சென்றால் அங்குள்ள அழகிய சித்திரங்களையும் சிலைகளையும் தூரத்திலிருந்து பார்த்து ரசிப்போம்.
ஆனால், சித்திரங்களுக்குள்ளேயே சென்று அதன் ஓர் அங்கமானால் எப்படி இருக்கும்?
அந்த அனுபவத்தைத் தருகிறது பிரஞ்சுத் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு கலை நிலையம்.
Paris' l'Atelier des Lumieres, பாரிஸின் முதல் மின்னிலக்கக் கலை நிலையம்.
நெதர்லந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வின்சண்ட் வான் கோவின் (Vincent Van Gogh) ஓவியங்கள், கலை நிலையத்தின் முதல் கண்காட்சியான "Nuit Etoilée"-இல் புத்துணர்வு பெறுகின்றன.
அதில், பல்லூடகக் கலைஞர் Gianfranco Iannuzzi, வான் கோவின் ஓவியங்களை வேறொரு பரிமாணத்தில் படைத்திருக்கிறார்.
கண்காட்சி அடுத்த வாரம் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.
அதன் படங்கள் இதோ...