மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 2-ஆவது நாளாக புதிய COVID-19 சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் 2-ஆவது நாளாக புதிய COVID-19 சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, புதிய COVID-19 சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
நேற்று அங்கு நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்டோர் தங்கியிருக்கும் ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பாதுகாவல் அதிகாரிக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் மேலும் இருவருக்கும் பிறகு கிருமித்தொற்று உறுதியானது.
அதனைத் தொடர்ந்து, பெர்த் நகரில் மீண்டும் முடக்கநிலையை அறிவிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.
நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க, வெளியிடங்களுக்குச் செல்லும்போதெல்லாம், முகக்கவசம் அணியும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.