COVID-19 நோய்ப்பரவல், அடுத்த ஆண்டுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படலாம்: உலகச் சுகாதார நிறுவனம்
COVID-19 நோய்ப்பரவல், அடுத்த ஆண்டுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படலாம்: உலகச் சுகாதார நிறுவனம்
COVID-19 நோய்ப்பரவல், அடுத்த ஆண்டுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என, உலகச் சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவு நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ராயன் (Mike Ryan) அதனைத் தெரிவித்தார்.
முக்கியமான சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், கிருமிப்பரவலை வேகமாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றார் அவர்.
மருத்துவமனைகளுக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்தல், சமூக இடைவெளியைப் பரவலாகப் பின்பற்றுதல், தடுப்புமருந்துகளைச் சமமாக விநியோகித்தல் போன்றவை அவற்றுள் அடங்கும்.
உலகத் தலைவர்கள், தங்களிடம் இருப்பிலுள்ள தடுப்புமருந்துகளைப் போதுமான அளவில் ஏழை நாடுகளோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்று டாக்டர் ராயன் குறைகூறினார்.