Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சில நாடுகள் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க முடியாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது: உலகச் சுகாதார நிறுவனம்

உலகச் சுகாதார நிறுவனம், சில நாடுகள் அவற்றின் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க முடியாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சில நாடுகள் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க முடியாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது: உலகச் சுகாதார நிறுவனம்

(படம்: REUTERS)

உலகச் சுகாதார நிறுவனம், சில நாடுகள் அவற்றின் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்க முடியாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் உலகம் முழுவதும் சமமான முறையில் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்பதில் நிறுவனம் மேலும் உறுதியாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் தயாரிப்பை அதிகரிப்பது, சமமான முறையில் விநியோகம் செய்வது ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவர பெரும் தடையாக இருப்பதாய் உலகச் சுகாதார நிறுவனத் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் (Tedros Ghebreyesus) கூறினார்.

இந்நிலையில், AstraZeneca தடுப்பூசிகள் குறித்து எழுந்துள்ள சுகாதார அக்கறைகளால், பல நாடுகள் அந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அஞ்சுகின்றன.

அந்தத் தடுப்பூசிகளைப் பற்றிய புதிய மதிப்பீட்டை நிறுவனம் இவ்வாரத்துக்குள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்