Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ் தேவாலயத்தில் தலை துண்டிக்கப்பட்டு பெண் கொலை

பிரான்ஸின் நீஸ் (Nice) நகரத்தில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் தேவாலயத்தில் தலை துண்டிக்கப்பட்டு பெண் கொலை

படம்: Valery Hache/AFP

பிரான்ஸின் நீஸ் (Nice) நகரத்தில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இருவர் மாண்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நகரின் மேயர், அச்சம்பவத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று வருணித்துள்ளார்.

தேவாலயத்தைச் சுற்றி ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

பிரான்ஸில், சில நாள்களுக்கு முன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது.

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை அவர் பிள்ளைகளிடம் காட்டியதாகவும், அதற்குத் தண்டனையாக அவரது தலையைத் துண்டித்ததாகவும் கொலையாளி தெரிவித்திருந்தார்.

அந்தச் சம்பவத்துக்கும் தற்போது நீஸில் நடந்துள்ள சம்பவத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்