ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகள்... உலகச் சாதனை
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார்.
BBC செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
மொத்தம் 7 ஆண், 3 பெண் குழந்தைகள்.
ஆனால், 10 குழந்தைகள் இருந்தது தம்பதிக்கே தெரியவில்லை.
ஸ்கேன் செய்துபார்த்தபோது 8 தான் கண்ணுக்குத் தெரிந்தன என்று பெண்ணின் கணவர் கூறினார்.
கோசியாம் தாமரா சித்தோல் (Gosiame Thamara Sithole) 5 பிள்ளைகளைச் சுகப் பிரசவமாகவும், மற்ற 5 பிள்ளைகளை சிசேரியன் (caesarean) மூலமாகவும் பெற்றெடுத்ததாக BBC கூறியது.
பிறந்த பிள்ளைகளின் படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கின்னஸ் (Guinness) உலகச் சாதனை அமைப்பு, திருவாட்டி சித்தோலின் சாதனையை விசாரித்து வருகிறது.
நிறைய பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கர்ப்பங்களில், பிள்ளைகள் முன்கூட்டியே பிறப்பது உண்டு.
37 வயது திருவாட்டி சித்தோல் 29 வாரங்களிலேயே 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்துவிட்டார்.
அவருக்கு ஏற்கனவே 6 வயதில் இரட்டைப் பிள்ளைகள் உள்ளன.