ஆஸ்திரேலியா: தனிமைப்படுத்தும் ஹோட்டலுக்குத் தீ வைத்ததாகப் பெண் மீது குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் (Cairns) நகரிலுள்ள தனிமைப்படுத்தும் ஹோட்டல் ஒன்றுக்குத் தீ வைத்ததாகப் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் (Cairns) நகரிலுள்ள தனிமைப்படுத்தும் ஹோட்டல் ஒன்றுக்குத் தீ வைத்ததாகப் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அவரும் அவரது இரு பிள்ளைகளும் தங்கியிருந்த Pacific Hotel Cairns எனும் ஹோட்டலுக்கு அந்த 31 வயதுப் பெண்
தீ வைத்ததாக நம்பப்படுகிறது.
11ஆவது மாடியைப் பெரிய அளவில் சேதப்படுத்திய தீயால் ஹோட்டலிலிருந்து 100க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது தடுப்புக்காவலில் இருப்பதாகவும் அவரது பிள்ளைகளைக் காவல்துறை அதிகாரிகள் பார்த்துக்கொள்வதாகவும் ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்தது.