பிரான்சில் தொடரும் "மஞ்சள் சட்டை" கலவரம்
பிரான்சில் செல்வந்தர்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்படும் அரசாங்கக் கொள்கைகளை எதிர்த்து, கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரான்சில் செல்வந்தர்களுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்படும் அரசாங்கக் கொள்கைகளை எதிர்த்து, கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
"மஞ்சள் சட்டை" ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது வார இறுதியாகத் தொடர்கின்றன.
இருப்பினும், கடந்த சில வார இறுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டோர் எண்ணிக்கையைவிட, தற்போதிய எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் களைக்க, அதிகாரிகள் தண்ணீரைப் பீச்சி அடித்தனர்.
வன்முறைச் சம்பவங்களைக் கையாளவும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.