ஏமன்: ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மரணம்
ஏமனில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மருத்துவ உதவியின்றி மடிய நேர்ந்தது.
ஏமனில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மருத்துவ உதவியின்றி மடிய நேர்ந்தது.
சிறுநீரகப் பகுதியிலும் கால் பகுதியிலும் குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. இதயங்களும் நுரையீரலும் தனித்தனியாக இருந்தன.
ஏமன் நாட்டின் சனா நகரில் அல்-தாவ்ரா(Al-Thawra) மருத்துவமனையில் அந்த ஆண்குழந்தைகள் பிறந்தன.
அவற்றைப் பிரிப்பதற்கான மருத்துவ வசதிகள் அங்கில்லாததால், அனைத்துலக உதவிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
உள்நாட்டுக் கலவரத்தால் சனா விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. குழந்தைகளை எங்கும் அனுப்ப முடியவில்லை.
பிறந்த இரண்டே வாரத்தில் அவை மடிந்தன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு நாட்டின் போட்டித் தரப்புகள் ஒன்றையொன்று குறைகூறின.