விளையாட்டாளர்களை அடையாளங்கண்டு வளப்படுத்தவும், மேம்படுத்தவும் விரிவான அணுகுமுறையை சிங்கப்பூர் பின்பற்றுகிறது
சிங்கப்பூர், விளையாட்டு வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களை வளப்படுத்தவும், மேம்படுத்தவும் விரிவான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.
விளையாட்டை, வாழ்க்கைத் தொழிலாய்த் தொடர ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அது வாய்ப்பளிக்கிறது.
விளையாட்டு வீரர்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள முழுமையாகவும், தனிப்பட்ட வகையிலும் ஆதரவு வழங்குவது அதன் நோக்கம்.
HPS எனும் உயர் செயல்திறன் விளையாட்டு முறை, அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) கூறினார்.
தொடக்கத்திலிருந்து இறுதிவரை விளையாட்டு வீரர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள அது ஆதரவளிக்கிறது. வீரர்கள் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றவும் அது வாய்ப்பளிப்பதாக அவர் சொன்னார்.
சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. உன்னதமான பயிற்றுவிப்பாளர்களைப் பணியில் அமர்த்த தேசிய விளையாட்டுச் சங்கத்துக்கு அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கும் என்று திரு. தோங் கூறினார்.