புக்கிட் பாத்தோக்கில் போதைப்பொருள் புழக்கத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 3 பேர் கைது
புக்கிட் பாத்தோக் பகுதியில் போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 3 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 29 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 63,000 வெள்ளி மதிப்பிலான 423 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து 19,100 வெள்ளி ரொக்கமும் 115 மாத்திரையும், 2 இருமல் மருந்து போத்தல்களையும் அதிகாரிகள் மீட்டனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.
- CNA/vc(gr)