Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சென்னை, புதுடில்லி, மும்பை போன்ற முக்கிய நகர்களில் அதிகரிக்கும் COVID-19 நோய்ப்பரவல்

வாசிப்புநேரம் -

இந்தியாவின் சென்னை, புதுடில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் COVID-19 நோய்ப்பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 271,000-க்கும் அதிகமானோருக்குப் புதிதாக நோய்த்தொற்று  ஏற்பட்டுள்ளது. 

அவர்களில் 7,743 பேருக்கு ஓமக்ரான் கிருமிப் பாதிப்பு இருந்தது. 

ஆக மோசமாக மகராஷ்டிரா மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 42,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

டில்லியில் 20,000 பேருக்கும் தமிழ்நாட்டில் 24,000 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சென்னை நகரில் மட்டும் சுமார் 9,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

அசாம், ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. 

தற்போது இந்தியாவில் 37.1 மில்லியன் பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்