Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஜோக்கோவிச் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ளக்கூடும்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

ஜோக்கோவிச் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால், நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆஸ்திரேலியக் குடிநுழைவுச் சட்டப்படி நாடு கடத்தப்படும் ஒருவர், மூவாண்டு வரை அந்நாட்டிற்குள் நுழைய முடியாது.

இருப்பினும், ஆஸ்திரேலியக் குடிநுழைவு அமைச்சர் ஒப்புதல் வழங்கினால், நாடு கடத்தப்பட்டவர் ஆஸ்திரேலியாவிற்குள் மூவாண்டுக்கு முன்னரே நுழைய அனுமதி வழங்கப்படும்.  

ஜோக்கோவிச்சிற்கு விதிக்கப்பட்ட தடை மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்காது.

அதே நேரம் அவர் சரியான காரணத்திற்காக ஆஸ்திரேலியா வர வேண்டியது இருந்தால் அனுமதி மறுக்கப்பட மாட்டாது என்றும் அது அந்த நேரத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் திரு. மோரிசன் தெரிவித்தார். 

- Reuters/vc

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்