Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உச்சத்தை எட்டியுள்ளது ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் COVID-19 தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாநிலத்தில்  COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 36 பேர் மாண்டனர்.

ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை அது.

மாண்டோரில் 33 பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். 

அவர்களில் பெரும்பாலோர் booster எனும் கூடுதல் தடுப்பூசியைப் போடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.

புதிதாக 29,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

மாநிலத்தில் antigen விரைவுப் பரிசோதனைகளில் பற்றாக்குறை நிலவுகிறது.

நேற்று சுமார் 1.2 மில்லியன் பரிசோதனைக் கருவிகள் மாநிலத்தை வந்தடைந்ததாக முதல்வர் டோமினிக் பெரோடெட் (Dominic Perottet) கூறினார்.

அடுத்த வாரத்திற்குள் 15 மில்லியன் பரிசோதனைக் கருவிகள் வந்துசேரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இந்நிலையில் விக்டோரியா மாநிலத்தில் மேலும் 22 பேர் மாண்டனர்.

20க்கும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாயின.

மாநிலத்தின் மருத்துவமனைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்