மூதுரை
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்.
சாகும்வரை தீமையே செய்தாலும் அப்படித் தீமை செய்பவருக்கும் கடைசிவரை நன்மை செய்து காக்கவே முயல்வார் அறிவுடையோர். தன்னை வெட்டிச் சாய்க்கும் மனிதருக்கும் கடைசி வரை நிழலைத் தருகிறது மரம்.
December 07, 2025