சபா நிலநடுக்கம் - காணாமல்போன 2 சிங்கப்பூரர்கள் மாண்டுவிட்டனர்
கோத்தா கினபாலுவில் காணாமல்போன நவ்தீப் சிங் ஜர்யால் ராஜ் குமார் (Navdeep Singh Jaryal s/o Raj Kumar), முகமது காஸி பின் முகமது (Mohammad Ghazi Bin Mohamed) ஆகிய 2 சிங்கப்பூரர்கள் மாண்டுவிட்டதாக கல்வி அமைச்சு இன்று உறுதிசெய்துள்ளது.
சிங்கப்பூர்: மலேசியாவின் சபா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், மேலும் 2 சிங்கப்பூரர்கள் உயிர் இழந்தது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளி மாணவர் நவ்தீப் சிங் ஜர்யால் ராஜ் குமாரும் (Navdeep Singh Jaryal s/o Raj Kumar), அதே பள்ளியின் ஆசிரியர் முகமது காஸி பின் முகமதும் (Mohammad Ghazi Bin Mohamed) கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் அந்தப் பேரிடரில் உயிர் இழந்ததை மலேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக, சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு இன்று காலை தெரிவித்தது. தடயவியல் சோதனைகளுக்குப் பிறகு, அவர்களின் உடல்கள் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படும். அதன் தொடர்பில், அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.