2 செயற்கைத் துணைக்கோளங்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் 2 செயற்கைத் துணைக்கோளங்கள் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டுள்ளன.
பேரிடர்கள், பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் ஆகியவற்றை அந்தத் துணைக்கோளங்கள் கண்காணிக்கும்.
சிங்கப்பூருக்காக, வணிக ரீதியாக பூமியைக் கண்காணிக்கும் துணைக்கோளங்களில் அவை இரண்டாவது.
ST Engineering நிறுவனத்தின் தயாரிப்பு, அந்தத் துணைக்கோளங்கள்.
Te-leos-2 என்னும் துணைக்கோளம் 750 கிலோகிராம் எடையுள்ளது. சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்ட அது, எந்தவொரு மோசமான வானிலையிலும் நாள் முழுவதும் அதிகத் தெளிவான படங்களை விண்வெளியிலிருந்து எடுத்து அனுப்பும்.
16 கிலோகிராம் எடையுள்ள Lume-lite-4 என்னும் சிறிய துணைக்கோளமும் விண்ணில் பாய்ச்சப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து அந்தச் செயற்கைத் துணைக்கோளங்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இதுவரை சிங்கப்பூர் இருபதுக்கும் மேற்பட்ட செயற்கைத் துணைக்கோளங்களை விண்ணில் பாய்ச்சியுள்ளது.
பேரிடர்கள், பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் ஆகியவற்றை அந்தத் துணைக்கோளங்கள் கண்காணிக்கும்.
சிங்கப்பூருக்காக, வணிக ரீதியாக பூமியைக் கண்காணிக்கும் துணைக்கோளங்களில் அவை இரண்டாவது.
ST Engineering நிறுவனத்தின் தயாரிப்பு, அந்தத் துணைக்கோளங்கள்.
Te-leos-2 என்னும் துணைக்கோளம் 750 கிலோகிராம் எடையுள்ளது. சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்ட அது, எந்தவொரு மோசமான வானிலையிலும் நாள் முழுவதும் அதிகத் தெளிவான படங்களை விண்வெளியிலிருந்து எடுத்து அனுப்பும்.
16 கிலோகிராம் எடையுள்ள Lume-lite-4 என்னும் சிறிய துணைக்கோளமும் விண்ணில் பாய்ச்சப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து அந்தச் செயற்கைத் துணைக்கோளங்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இதுவரை சிங்கப்பூர் இருபதுக்கும் மேற்பட்ட செயற்கைத் துணைக்கோளங்களை விண்ணில் பாய்ச்சியுள்ளது.