Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீடு கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட 2.3 மில்லியன் வெள்ளி தவறாய்ப் பயன்படுத்தப்பட்டதாக 57 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

வீடு கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட சுமார் 2.3 மில்லியன் வெள்ளியைத் தவறாகப் பயன்படுத்தியதாக 57 வயது ஆடவர் பெர் போ ஹுவாட் (Per Poh Huat) மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

அவரின் UOB வங்கியில் எட்டுக் காசோலைகளாகக் குறைந்தது 8 மில்லியன் வெள்ளி போடப்பட்டது. 

2021ஆம் வீட்டைக் கட்டும் பணி பாதியில் நின்றதால் பணத்தைக் கொடுத்த திரு. லிம் பீ ஹுவாட் (Lim Bee Huat) காவல்துறையிடம் புகார் செய்தார். 

சந்தேக நபர் 200 ஆயிரம் வெள்ளிப் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்