Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடிப்படைப் பராமரிப்புக் கட்டமைப்பில் சேர 800 பொது மருந்தகங்கள் பதிவுசெய்துள்ளன: சுகாதார அமைச்சர்

வாசிப்புநேரம் -
அடிப்படைப் பராமரிப்புக் கட்டமைப்பில் சேர சுமார் 800 பொது மருந்தகங்கள் பதிவுசெய்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள குடும்ப மருந்தகங்கள் எண்ணிக்கையில் அது கிட்டத்தட்ட பாதி.

நாட்பட்ட நோய் உள்ளவர்களுக்கு முழுமையான, ஒருங்கிணைந்த பராமரிப்பை வழங்க பல்வேறு பொது மருந்தகங்களின் விவரங்களை அந்தக் கட்டமைப்பு ஒன்று திரட்டுகிறது.

செம்பவாங் குழுத்தொகுதியின் சுகாதார விழாவில் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஓங் அது பற்றித் தகவல் அளித்தார்.

குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் நூற்றுக்கும் அதிகமான இலவச வாராந்தர சுகாதார நடவடிக்கைகள்
விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

அதன்மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சத்துணவு, மனநலச் சுகாதாரம் போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகளில் குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்