நலமாக மூப்படையும் திட்டம் - மேலும் 3 வட்டாரங்களுக்கு விரிவாக்கம்
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Jeremy Long)
மூத்தோர் அதிகமாக வசிக்கும் மேலும் 3 வட்டாரங்களில் நலமாக மூப்படைதல் எஸ்ஜி செயல்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
பிடோக், புக்கிட் பாஞ்சாங், தியோங் பாரு- ரெட்ஹில் ஆகியன அந்த மூன்று பகுதிகள்.
அங்கு சமூகச் சுகாதாரச் சேவைகள், வீட்டு உதவித் திட்டங்கள், மூத்தோருக்கான வசதிகள் செய்துதரப்படும்.
மூத்தோர் சமூகத்தில் சுயமாக வாழ உதவுவதே திட்டத்தின் நோக்கம்.
கடந்த ஆண்டு தோ பாயோவில் அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
4 அம்சங்களில் 110,000க்கும் அதிகமான மூத்தோர் பயன்பெறவுள்ளனர்.
புதிய வசதிகளில் உடற்பயிற்சிப் பாதைகள், தடையில்லாமல் வசதிகளைப் பயன்படுத்துதல்,
முதுமை மறதிநோயால் பாதிக்கப்படுவோருக்கு உகந்த வசதிகள், மனதிற்கு இனிமையான சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கும்.
அந்த மேம்பாடுகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிடோக், புக்கிட் பாஞ்சாங், தியோங் பாரு- ரெட்ஹில் ஆகியன அந்த மூன்று பகுதிகள்.
அங்கு சமூகச் சுகாதாரச் சேவைகள், வீட்டு உதவித் திட்டங்கள், மூத்தோருக்கான வசதிகள் செய்துதரப்படும்.
மூத்தோர் சமூகத்தில் சுயமாக வாழ உதவுவதே திட்டத்தின் நோக்கம்.
கடந்த ஆண்டு தோ பாயோவில் அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
4 அம்சங்களில் 110,000க்கும் அதிகமான மூத்தோர் பயன்பெறவுள்ளனர்.
புதிய வசதிகளில் உடற்பயிற்சிப் பாதைகள், தடையில்லாமல் வசதிகளைப் பயன்படுத்துதல்,
முதுமை மறதிநோயால் பாதிக்கப்படுவோருக்கு உகந்த வசதிகள், மனதிற்கு இனிமையான சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கும்.
அந்த மேம்பாடுகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : CNA