Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோ குடியிருப்புப் பகுதியில் மனைவியைக் கொலைசெய்த சந்தேகத்தில் 33 வயது ஆடவர் கைது

அங் மோ கியோ குடியிருப்புப் பகுதியில் மனைவியைக் கொலைசெய்த சந்தேகத்தில் 33 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -

அங் மோ கியோ குடியிருப்புப் பகுதியில் மனைவியைக் கொலைசெய்த சந்தேகத்தில் 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து இன்று காலை 7:35 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு 30 வயதுப் பெண் ஒருவர் அசைவின்றி வீட்டில் கிடந்ததைக் கண்டனர்.

அதன் பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவருக்குக் காயங்கள் இருந்தன, அதனால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மாண்ட பெண்ணும் கைது செய்யப்பட்ட ஆடவரும் தம்பதி என்று தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

நாளை ஆடவர்மீது நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்