Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங் மோ கியோ கொலைச் சம்பவம் - சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

அங் மோ கியோ வீட்டில் மனைவியைக் கொலைசெய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டஆடவர்மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

டேவிட் பிரையன் சவ் (David Brian Chow) என்ற அந்த 33 வயது சிங்கப்பூரர் தமது 30 வயது மனைவி எலிசபத் பிரான்ஸிஸைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக நேற்று காலை 7:40 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. 

அங் மோ கியோ ஸ்ட்ரீட் 23-இல் உள்ள புளோக் 228B -இல் அந்தச் சம்பவம் நடந்தது. 

கைது செய்யப்படும் போது சவ்-விற்குக் காயங்கள் இருந்ததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எலிசபெத் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாண்ட பெண்ணும் கைது செய்யப்பட்ட ஆடவரும் தம்பதி என்று தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். 

- CNA/ll(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்