Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ராணுவக் கண்காட்சி; வேகமாக விற்பனையாகும் நுழைவுச் சீட்டுகள்

வாசிப்புநேரம் -

ராணுவத்தின் பொது உபசரிப்பு நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகள் வேகமாகத் தீர்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

F1 Pit கட்டடத்தில் இந்த வாரயிறுதியில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய இடத்தில் நடைபெறும் கண்காட்சிகளுக்கான 90,000 அனுமதிச் சீட்டுகளில் 80 விழுக்காட்டுக்குமேல் கொடுக்கப்பட்டுவிட்டன.

பொங்கோல், பீஷான் ஆகிய வீடமைப்புப் பேட்டைகளில் அடுத்த மாதம்  நடைபெறவிருக்கும் கண்காட்சிக்கான அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

கூட்டத்தைச் சமாளிக்க இவ்வாண்டு அனுமதிச் சீட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வருகையாளர்கள் சில தனித்துவமான சவாரிகளில் செல்லலாம்.
அது ராணுவ மிதவைப் பாலமாக அல்லது ஆயுதந்தாங்கிய வாகனமாக இருக்கலாம்.

ராணுவத்தின் பொது உபசரிப்பு ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளது.

முதன்முறையாக வருகையாளர்கள் குறி சுடுவதில் திறன் காட்டலாம்...ஒளிக்கற்றை மூலமாக.

பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்து பங்கேற்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணிக்கு ஒருமுறை நடைபெறும் போட்டிகளிலும் பொதுமக்கள் பங்கெடுக்கலாம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்