Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பீச் ரோட்டில் ஆடவரும் மாதும் விடாப்பிடியாகச் சண்டையிடும் காணொளி - காவல்துறை விசாரணை

வாசிப்புநேரம் -

பீச் ரோட்டில் ஆடவரும் மாதும் விடாப்பிடியாகச் சண்டையில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்துக் காவல்துறை விசாரணை நடத்துவதாகக் கூறியிருக்கிறது. 

சம்பவம் குறித்து நேற்றுக் (6 ஜூலை) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக Today இணையத்தளத்திடம் காவல்துறை கூறியது. 

அந்த ஒரு நிமிடக் காணொளியை யாரோ உயர் மாடியிலிருந்து எடுத்திருப்பது போல் தெரிகிறது. 

தொப்பி அணிந்த ஒரு மாது சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வெள்ளை வேனில் இருக்கும் ஆடவரிடம் ஏதோ சொல்கிறார். 

வேன் நகரும் வேளையில், மாது வேனின் கதவை எட்டி உதைக்கிறார். 

வேனிலிருந்து உடனே இறங்கும் ஓட்டுநர் அவருடன் சண்டைக்குச் செல்கிறார். 

மாது ஆடவரை உதைக்க முயற்சி செய்வதும், ஓட்டுநர் மாதின் தொப்பியைத் தள்ளிவிடுவதும், பின் மாது வேனின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உதைப்பதும், ஆடவர் அவரைக் கீழே தள்ளுவதும் காணொளியில் பதிவாகியுள்ளன. 

இருவரும் விடாப்பிடியாக ஒருவரின் செயலுக்கு மற்றவர் பதில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். 

இறுதியில் வேன் இடத்தைவிட்டு நகர்கிறது. 

எதனால் சண்டை மூண்டது என்பது தெரியவில்லை. 

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்