Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நீல நிறத்தில் காட்சியளிக்கும் கட்டடங்கள் - உலகத் தண்ணீர் தினத்துக்கான சிறப்பு ஏற்பாடு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன்றுமுதல் (மார்ச் 19) வரும் புதன்கிழமை (மார்ச் 22) வரை 56 அடையாளச் சின்னங்களும் கட்டடங்களும் நீலநிறத்தில் பிரகாசிக்கவுள்ளன.

உலகத் தண்ணீர் தினத்தை (22 மார்ச்) அனுசரிக்கவே அத்தகைய ஏற்பாடுகள்... PUB எனும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் "City Turns Blue" திட்டத்தின்கீழ் கட்டடங்களுக்கு நீல நிறத்தில் ஒளியூட்டப்படுகிறது.

சிங்கப்பூரில் இம்முறை சாதனையளவில் 56 கட்டடங்களுக்கு நீல ஒளி சேர்க்கப்படுகிறது. Capitol Singapore, Fullerton Hotel, மரினா பே நிதி நிலையம், செந்தோசாவின் SkyHelix உள்ளிட்ட 16 புதிய கட்டடங்களிலும் ஒளியூட்டைக் காணலாம்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கல்விநிலையம், ITE கல்லூரி, நன்யாங் நுண்கலைக்கழகம், துமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய மேல்நிலைக் கல்வி நிலையங்கள் திட்டத்தில் முதல்முறை பங்கெடுக்கின்றன.

இம்மாதம் முழுவதிலும் #GoBlue4SG எனும் இயக்கம் தொடர்பாக, அதன் தண்ணீர்ச் சேமிப்பு முயற்சிகளில் உள்ளூர்ச் சமூகத்தின் ஆதரவைப் பெறப் பொதுப் பயனீட்டுக் கழகம் முனைகிறது.

உலகத் தண்ணீர் தினத்தையொட்டி சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் மொத்தம் 460 பங்காளிகள், பங்காளி அமைப்புகளின் பங்கெடுப்பு இடம்பெறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்