Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூன் லே டிரைவ் கத்திக்குத்து - இளைஞர்கள் இருவருக்குச் சிறை, பிரம்படி

வாசிப்புநேரம் -
பூன் லே டிரைவ் கத்திக்குத்து - இளைஞர்கள் இருவருக்குச் சிறை, பிரம்படி

(கோப்புப் படம்: Jeremy Long)

பூன் லே டிரைவில் இரு ஆடவர்களைக் கத்தியைக் கொண்டு தாக்கிய இருவருக்கு சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன. 

தண்டனை:

  • 21 வயது முகமது சாஜித் சலீம்: 36 மாதச் சிறைத் தண்டனை, 6 பிரம்படி
  • குற்றத்தில் துணைபுரிந்த 20 வயது நபர்: 39 மாதச் சிறைத் தண்டனை, 6 பிரம்படி

நடந்தது என்ன?

  • இருவரும் 2016ஆம் ஆண்டில் நண்பர்களானார்கள். 2020ஆம் ஆண்டில் அதே குண்டர்கும்பலில் சந்தித்து நெருக்கமானார்கள்
  • சாஜித், பிரவீன் ராஜ் சந்திரன் (சம்பவத்தில் மாண்டவர்) இருவரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
  • சாஜித்துடைய காதலியும் பிரவீனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை.
  • ஏப்ரல் 5ஆம் தேதியன்று அவர்களது நண்பரான இமானுவல் ரவியின் திருமண நிகழ்ச்சியின்போது பிரவீனைத் தாக்கத் திட்டம் தீட்டப்பட்டது. 
  • அன்று இருவரும் ரொட்டி நறுக்கும் கத்தியைப் பயன்படுத்தி பிரவீனைத் தாக்கினர்
  • பிரவீனைச் சாஜித் தலையில் வெட்டினார். 
  • புதன்கிழமையன்று (6 ஏப்ரல்) புளோக் 175 பூன் லே டிரைவில் அந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது. அதன் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
  • மறுநாள் அவர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்