Skip to main content
புத்தகத்தை இரவல் பெறுவதே தனி அனுபவம்! எங்கே?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

புத்தகத்தை இரவல் பெறுவதே தனி அனுபவம்! எங்கே?

வாசிப்புநேரம் -
“Browse-n-Borrow” என்ற சுய சேவை நூலகத்தைத் தேசிய நூலக வாரியம் புதிதாக அமைத்துள்ளது.

இந்நூலகம் வெஸ்ட் மாலில் (West Mall-இல்) இன்று (ஜூன் 3) தொடக்கம் கண்டது.

வாசிப்பதற்கான வளங்களையும் அனுபவத்தையும் தொடர்ந்து மக்களுக்கு வழங்க இத்திட்டம் கைகொடுக்கிறது.

புக்கிட் பாத்தோக் நூலகம் கடந்த ஆண்டு (2023)புதுப்பிப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டது.

புதுப்பொலிவுடன் அடுத்த ஆண்டு (2025) அது மீண்டும் திறக்கப்படும்.

இடைப்பட்ட காலத்தில் வாசகர்களுடைய வாசிப்புப் பழக்கம் பாதிப்படையாமல் தொடரவேண்டும் என்று தேசிய நூலக வாரியம் விரும்புகிறது.

எல்லா வயதினரும் புதிய சுய சேவை நூலகத்தை நாடலாம்.

மிக எளிமையாக இரவல் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்