Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

வரவுசெலவுத் திட்டம்: "கூடுதல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள நிதியுதவி உதவினாலும் அது மட்டும் போதாது" - இளம் பெற்றோர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 3 அல்லது அதற்கும் அதிகமான பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.

வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் அந்த விவரங்களை அறிவித்தார்.

அது பற்றி சிலரிடம் கருத்துகளைத் திரட்டியது 'செய்தி'.

"நிதியுதவியைத் தாண்டி வேறு பல அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்"

தம்பதிகள் கூடுதல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் ஊக்குவிக்கலாம் என்று திருமதி சப்னா 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார்.
Related article image
படம்: சப்னா
ஆனால் நிதியுதவியைத் தாண்டி வேறு பல அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்ற ஆண்டு தேசிய தினக் கூட்ட உரையில் பெற்றோருக்கு அதிக விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் விடுப்புத் தர அனைத்து நிறுவனங்களும் தயாராய் இல்லை என்று தோன்றுவதாக அவர் சொன்னார்.

"செலவுகளை ஈடுகட்ட புதிய தொகை ஓரளவு கைக்கொடுக்கும்"

பிள்ளைகள் வளர வளர இணைப்பாட வகுப்புகள், பராமரிப்புச் செலவுகள் ஆகிய செலவு அதிகரிப்பதைச் சுட்டினார் திருமதி எலிசபெத்.
Related article image
படம்: எலிசபெத்
ஒரு வயதிலிருந்து 6 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு 1,000 LifeSG சிறப்புத்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் வோங் சொன்னார்.

செலவுகளை ஈடுகட்ட புதிய தொகை ஓரளவு கைக்கொடுக்கும் என்றார் எலிசபெத்.

"அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க இது போதுமா என்று தெரியவில்லை"

ஒவ்வோர் ஆண்டும் 1000 வெள்ளி வழங்கினாலும் இந்தக் காலக்கட்டத்தில் அதிகரிக்கும் விலையைச் சமாளிக்க அது போதுமா என்று தெரியவில்லை என்றார் திருமதி ஷஃபினா.
Related article image
படம்: ஷஃபினா
"உதாரணத்திற்கு ஒரு பால் மாவு டின் சுமார் 80 வெள்ளி. கொடுக்கப்படும் 1000 வெள்ளியை வைத்து சில மாதங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவுக்குத்தான் வாங்க முடியும்," என்றார் அவர்.

பாலர்பள்ளிகளின் மாதாந்திரக் கட்டணம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை மூவரும் வரவேற்றனர்.

அதில் சேமிக்கப்படும் தொகையை வேறு அம்சங்களில் செலவிடலாம் என்று அவர்கள் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்