புக்கிட் பாஞ்சாங்கில் 37 வயதுப் பெண் கீழே விழுந்து மரணம்
வாசிப்புநேரம் -
8 world
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோட்டில் அமைந்துள்ள கழக புளோக் 619இன் அடித்தளத்தில் பெண் ஒருவர் விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இன்று காலை நடந்ததாக அதைக் கண்ட ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தார் என்று 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
37 வயதுப் பெண் விழுந்து கிடந்த இடத்தில் ரத்தக்கறை காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
சுயநினைவின்றிக் கிடந்த பெண் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் காலை 9 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் கூறின.
விசாரணை தொடர்கிறது.
சம்பவம் இன்று காலை நடந்ததாக அதைக் கண்ட ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தார் என்று 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
37 வயதுப் பெண் விழுந்து கிடந்த இடத்தில் ரத்தக்கறை காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
சுயநினைவின்றிக் கிடந்த பெண் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் காலை 9 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் கூறின.
விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others