Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக்கில் சைக்கிளோட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகச் சொல்லப்படும் கார் - காவல்துறை விசாரணை

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் அவென்யூ ஐந்தில் சைக்கிளோட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகச் சொல்லப்படும் கார் குறித்துக் காவல்துறை விசாரித்துவருகிறது. 

போக்குவரத்துச் சமிக்ஞையில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சைக்கிளோட்டியைக் கார் ஒன்று இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் செல்வது காணொளியில் பதிவாகியுள்ளது. 

நேற்று (7 ஜூலை) இரவு சுமார் 7 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் காவல்துறை சொன்னது. 

சம்பவம் குறித்து விசாரிப்பதாக அது கூறியது. 

இணையத்தில் பகிரப்படும் காணொளியில் வெள்ளைக் கார் ஒன்று இடதுபுறம் திரும்பும்போது சாலையைக் கடக்கும் சைக்கிளோட்டியை இடித்துத் தள்ளுவது தெரிகிறது. 

அப்போது பாதசாரிகள் கடப்பதற்கான பச்சை மனிதன் சமிக்ஞை ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. 

18 வயது சைக்கிளோட்டி நினைவுடன் இருந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்