Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையம் வழி பயணம் மேற்கொள்பவர் எண்ணிக்கை வேகமாக உயர்கிறது...

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையம் வழி பயணம் மேற்கொள்பவர்  எண்ணிக்கை வேகமாக உயர்கிறது...

(கோப்புப் படம்: Changi Airport Group)

சிங்கப்பூரில் கடந்த மாதம் சாங்கி விமான நிலையம் வழி பயணம் செய்தோர் எண்ணிக்கை நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த நிலையில் 72 விழுக்காட்டை எட்டியுள்ளது.

கடந்த மாதம் மட்டுமே சுமார் 4.6 மில்லியன் பேர் அதன் வழி பயணம் மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டு முழுமைக்கும் சாங்கி விமான நிலையம் வழி மொத்தம் 32 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டனர்.

2019ஆம் ஆண்டில் பயணம் செய்தோர் எண்ணிக்கையில் அது கிட்டத்தட்ட பாதி.

ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தாய்லந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆக அதிகமானோர் சாங்கி விமான நிலையம் வழி பயணம் செய்தனர்.

சிங்கப்பூர்-கோலாலம்பூர் விமானச் சேவைகளில், ஆக அதிகமானோர் பயணம் செய்தனர்; உலக அளவில் அது ஆகப் பரபரப்பான விமானச் சேவையாகக் கருதப்படுகிறது. 

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம், நான்காம் முனையங்கள் மீண்டும் திறக்கப்படுவதால் ஆகாயப் போக்குவரத்து இணைப்புகளும் சேவைகளும் தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்