Skip to main content
கிளமெண்டி மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிளமெண்டி மரணம் - சந்தேக நபர் சம்பவ இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்

வாசிப்புநேரம் -

கிளமெண்டியில் அடித்தளத் தொண்டூழியரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட்டார். 

கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் 50 வயது தோ சீ ஹோங் (Toh Chee Hong) இன்று காலை 10.20 மணிக்கு  கிளமெண்டி அவென்யூ 4க்கு(Clementi Avenue 4) வந்தார். 

அவரோடு சாதாரண உடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் வந்தனர். 

கொலைச் சம்பவம் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பொது மக்கள் அந்தப் பகுதிகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

காலை 11.40 மணிக்குச் சந்தேக நபரை  அழைத்துக்கொண்டு காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். 

தோ, 41 வயது அடித்தளத் தொண்டூழியர் கூ சின் வா வின்சன்ஸைக் (Khoo Chin Wah Winson) கொலை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை மாலை அந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்