சிங்கப்பூரில் 4,481 பேருக்குக் கிருமித்தொற்று; 10 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில்
சிங்கப்பூரில் புதிதாய் 4,481 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 4,200க்கும் மேற்பட்டோர் சமூக அளவில் பாதிக்கப்பட்டனர்.
மேலும் ஒருவர் மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டாவது நடைமுறையின் கீழ், 2,955 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். எஞ்சியோர், சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.
இரண்டாவது நடைமுறை என்பது நலமாக, அறிகுறிகளின்றி இருப்போர் அல்லது மிதமான அறிகுறிகளுடன் இருப்போர்.
தற்போது 759 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
10 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
சிங்கப்பூரில் சுமார் 58 விழுக்காட்டினர், booster தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.