மத்திய சேமநிதியின் புதிய முதலீட்டுத் திட்டம்
This audio is generated by an AI tool.
மத்திய சேமநிதிக் கழகம் புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
2028இல் அது அறிமுகமாகும்.
சிங்கப்பூரர்கள் ஓய்வுக்காலச் சேமிப்பை அதிகரிக்க மத்திய சேமநிதி நிலையான, ஆபத்தில்லாத வட்டியைத் தருகிறது.
புதிய முதலீட்டுத் திட்டம்வழி மத்திய சேமநிதியில் இருக்கும் பணத்தை முதலீடு செய்ய முடியும்.
பல்வேறு வாய்ப்புகள் இருக்கும்.
புதிய திட்டம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவோருக்கு உகந்தது.
ஆர்வம் உள்ளோர் திட்டத்தில் சேரலாம்.
திட்டத்தில் சேர்வோரின் வயதுக்கு ஏற்ப அவர்களின் முதலீட்டு அபாயம் படிப்படியாகக் குறைக்கப்படும்.
முதலீடு நிறைவுபெற்றதும் அந்தத் தொகை முதலீட்டாளரின் ஓய்வுக்காலக் கணக்கில் சேர்க்கப்படும்.
முழு ஓய்வுக்காலத் தொகையை எட்டியதும் எஞ்சிய தொகை சாதாரணக் கணக்கில் போடப்படும்.